Thursday, July 25, 2013

poems???

வெண்சங்கொலி பரப்பும் சமுத்திரதருகே 
அமர்திருந்த கார்குழலியின் முகம்காண 
ஆதவன் ஓராயிரம் மைல் கடந்து எழுந்திட்டான்..
அலைமகளோ ஓராயிரம் வெண்புரவியில் புறப்பட்டாள்
அவள்  காலடியில் தஞ்சம்புக..
உள்ளாளன் மனம் அவன் மடல் கண்டு 
சிலிர்த்த அத்தாரகையை 
நோக்கினோர் வினவினர்        
இது அந்த அலையின் செயலா 
இல்லை அவனின் செயலா?? 

நெற்றிச்சூடி!!!
தடை பல கடந்து 
தயக்கங்களை மறந்து   
அவளருகே அவன்  நெருங்க 
நெற்றிச்சூடி இறுதி  தடையாக 
அவள் உச்சியில் அவன்  திலகமிட..


ஒட்டியானம்!
கானகத்து நறுமலரின் நாற்றமிகு 
என் பூங்கோதையின் -இடை  படர்ந்து 
ஒட்டி உறவாடிற்று ஒட்டியானம்!

என் பூங்கோதையை ஒட்டிய`நாண் ஆதலினால்தான் 
நீ ஒட்டியனமோ ! 

No comments: