முன்பறியா வேதனைகள் !
முன்கூட்டிய யோசனைகள் !
முடிந்து விடும் என்ற போதும்
தொடங்காத நித்திரைகள்!
துணிவு தூரம் இருக்கையிலே
தொடர்ச்சியான சிந்தனைகள்!
இரை தேடி வந்த நான்
இரைக்கே இரை ஆகிவிட்டேன்!
இனி ஒரு வழி உண்டோ !
இதற்கு மேல் இறை உண்டோ!
ஆழி பெருங்காற்றில் அலைகழியும் ஓடம் போல்
வாழ்வெனும் சூதினிலே நிலைகுலையும் மனிதனானேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment