Wednesday, January 26, 2011

தவிப்பு !!

முன்பறியா வேதனைகள் !
முன்கூட்டிய
யோசனைகள் !
முடிந்து விடும் என்ற போதும்
தொடங்காத நித்திரைகள்!
துணிவு தூரம் இருக்கையிலே
தொடர்ச்சியான சிந்தனைகள்!

இரை தேடி வந்த நான்
இரைக்கே இரை ஆகிவிட்டேன்!
இனி ஒரு வழி உண்டோ !
இதற்கு மேல் இறை உண்டோ!
ஆழி பெருங்காற்றில் அலைகழியும் ஓடம் போல்
வாழ்வெனும் சூதினிலே நிலைகுலையும் மனிதனானேன்!

No comments: